உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

காஷ்மீர் மக்களுக்காக நவாஷ் சரீப் ஐக்கிய நாடு சபைக்கு கடிதம்

இஸ்லாமாபாத்- ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதி பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் மற்றும் மனித உரிமைக்கான ஐ.நா.வின் உயர் ஆணையர் அல் ஹூசைனிடம் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில் ”ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ச்சியாக மற்றும் அதிர்ச்சியுண்டாக்குகிற வகையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதங்களில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், சர்வதேச அமைப்புகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் விதிகளை காஷ்மீரில் பின்பற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Related posts

யாழ் மக்களின் பிரச்சினை! சகோதர இனம் என்ற எண்ணத்தில் இவர்களை பாருங்கள் அமைச்சர் றிஷாட்

wpengine

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவநாதர் ஆரம்ப பாடசாலை முதலிடம்

wpengine

அமைச்சர் ஹக்கீமால் ரௌடி காங்கிரஸ் தலைவராக பாயிஸ் நியமனம் செய்யப்படுவாரா?

wpengine