உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

காஷ்மீர் பகுதிகளை மீட்க வேண்டிய நேரம் இது! மோடிக்கு பாபா ராம்தேவ் வேண்டுகோள்!

காஷ்மீர் பகுதிகளை மீட்க வலுவான நேரம் இது.எனவே, பாகிஸ்தானிடமிருந்து காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதிகளை இந்தியா மீட்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாபா ராம்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:சர்ச்சைக்குரிய வகையில் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் பகுதிகளை மீட்க வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது. பாகிஸ்தானிடமிருந்து அந்த பகுதிகளை விடுவித்து மீட்டெடுக்க பிரதமர் மோடி பிரச்சாரத்தை துவங்க வேண்டும். என்ன தைரியத்தில் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்போம் என நவாஸ் ெஷரிப் சொல்கிறார் என எனக்கு தெரியவில்லை.

நமது குழந்தைகள் காஷ்மீரை வரைபடத்தில் மட்டுமே பார்த்திருக்கிறார்கள். ஆனால், பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்து விட்டது. ஒரு கோழை நாடு வலிமை வாய்ந்த நம் நாட்டின் பகுதியை கைப்பற்ற நினைக்கும் போது நாம் இங்கே சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்க முடியாது என்றார்.

Related posts

சம்மாந்துறை பஸ் டிப்போவை இடமாற்றுவதை கைவிட்டு தரமுயர்த்துவதில் கவனஞ்செலுத்துங்கள்’ – போக்குவரத்து அமைச்சர்களிடம் ரிஷாட் கோரிக்கை

wpengine

நீர்க்கட்டணம் அதிகரிக்க கலந்துறையாடல்! சமுர்த்தி பயனாளிகளுக்கு விலக்களிப்பு

wpengine

பாம்புப்புற்றுக்கு பால் ஊற்றிய 16 வயது சிறுவன், மின்சாரம் தாக்கி பலி!!

Maash