உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

காஷ்மீர் -பகிஸ்தான் எல்லையில் மீண்டும்

காஸ்மீரின் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்தும் எறிகணைத் தாக்குதல் இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதல்களில் 5 பொதுமக்களும், 2 படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியத் தரப்பில் தாய் ஒருவரும், அவரது 2 பிள்ளைகளும் கொல்லப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் 2 படையினர் உட்பட மேலும் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானி அபிநந்தன் வர்தமன் பாகிஸ்தானினால் விடுவிக்கப்பட்டதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டபோதும், தொடர்ந்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பசுமை விவசாயத்துக்கான அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றமில்லை-ஜனாதிபதி

wpengine

தொலைபேசிகளில் வட்ஸ் அப் செயலி இயங்காது என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

wpengine

சம்பாந்துறையில் 17 வயது யுவதி தற்கொலை

wpengine