பிரதான செய்திகள்

காணி விடயத்தில் முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு அநீதி அமைச்சர் றிஷாட் ஆராய்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் Dr  சிவமோகன், தேசிய ஐக்கிய முண்ணனி  தலைவர் அசாத் சாலி மற்றும், சிரேஷ்ட சட்டத்தரணி என். எம் சஹீட், மாகாண சபை உறுப்பினர் ஜனூபர், மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட முன்னால் அரசியல்வாதி தந்தை றஹீம் முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு அதிகாரிகளாலும்,ஒரு சில அரசியல்வாதிகளாலும் இழைக்கப்பட்ட அநீதிகளை விபரித்தார்.

பல முறை காணி கச்சேரிகள் வைக்கப்பட்டும் இற்றைவரை அவர்களுக்கு உரிய காணிகள் வழங்கப்படவில்லையென போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.

இதன் பின் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் அந்த இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, அமைச்சர் றிஷாட் தீர்வுக்கான வழிமுறைகளை ஆராய்ந்தார்.

Related posts

வித்தியா வழக்கில், மரண தண்டனைக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் திகதி விதித்துள்ளது.

Maash

மணல் மாஃபியா குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன்!

wpengine

நாட்டில் 12 புதிய மருந்து தொழிற்சாலைகளை ஆரம்பிக்க தீர்மானம்!

Editor