பிரதான செய்திகள்

கல்பிட்டி பகுதியில் 9கோடிக்கு மேல் தங்க கட்டிகள்

புத்தளம், கற்பிட்டியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி 9 கோடியே 53 லட்சத்து 636 ரூபாய் என இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.


இந்த தங்கம் பாலவிய பிரதேசத்தில் இருந்து கற்பிட்டி வரை மோட்டார் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.


குறித்த தங்கம் 9 கிலோ 592 கிராம் நிறையுடையதெனவும், அவை அனைத்தும் 22 கரட்டிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த தங்கம் மிகவும் சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

பாதிப்படைந்துள்ள விவசாயத்தை மேம்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கை

wpengine

கல்முனை மாநகர வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் ஹக்கீம் (படம்)

wpengine

சட்டவிரோத கடல்தொழிலை கண்டித்து, முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் – ரவிகரன் எம்.பி பங்கேற்பு.

Maash