பிரதான செய்திகள்

கல்பிட்டி பகுதியில் 9கோடிக்கு மேல் தங்க கட்டிகள்

புத்தளம், கற்பிட்டியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி 9 கோடியே 53 லட்சத்து 636 ரூபாய் என இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.


இந்த தங்கம் பாலவிய பிரதேசத்தில் இருந்து கற்பிட்டி வரை மோட்டார் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.


குறித்த தங்கம் 9 கிலோ 592 கிராம் நிறையுடையதெனவும், அவை அனைத்தும் 22 கரட்டிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த தங்கம் மிகவும் சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது

wpengine

தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு! என்ன காரணம்?

wpengine

தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி; மன்னார் மாணவி வரலாற்றுச் சாதனை

Maash