பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

கரவெட்டி பகுதியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த 9 இல் கல்வி கற்று வரும் மாணவன்..!

யாழ் வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்று(07) இரவு வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

தரம் 9 இல் கல்வி கற்று வரும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கரவெட்டி மத்தணி பகுதியைச் சேர்ந்த நகுலேஸ்வரன் யக்சன் வயது 14 என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம்  அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முல்லைத்தீவு மாவட்டத்தில் வயலுக்கு அறுவடைக்கு சென்றவர் சுட்டுக் கொலை

wpengine

மன்னார் சவேரியார் கல்லூரியின் 150 வருட பூர்த்தி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

wpengine

நாட்டின் பல பாகங்களில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

Editor