பிரதான செய்திகள்

கந்தளாய் முஸ்லிம் பள்ளிவாசலின் உண்டியல் திருட்டு

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் நடுஜும்ஆ பள்ளிவாயலின் பள்ளிவாயல் கட்டிட நிதிக்கான உண்டியல் இனந்தெரியாத ஒருவரினால் நேற்றிரவு (28) உடைத்து பணம் திருடப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பள்ளிவாயல் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை தூக்கிச் சென்று இரும்புக் கம்பியால் உடைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பள்ளிவாயல் நிர்வாகத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டதற்கு இணங்க பொலிஸார் பள்ளிவாயலில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமரா காணொளியை பரிசோதித்த போது இனந்தெரியாத நபர் ஒருவர் உண்டியலை உடைத்து பணம் திருடுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிப்பதோடு, திருடன் வெளிபிரதேசத்தினை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சமூக வலைத்தளத்தில் சிக்கிய நாமலின் காதலி

wpengine

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

wpengine

IMF தீர்மானத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாக வாக்களிக்கும்!-ஜீவன் தொண்டமான்-

Editor