கேரளாவில் உள்ள முதியோர் நலக் காப்பகத்தில் வசித்து வந்த முதியோர் இருவர் காதலித்து வந்துள்ளனர்.
முதியோர் இல்லத்தில் சந்தித்து இருவரும் காதலித்து வந்த நிலையில், அவர்கள் திருமணம் செய்துள்ளனர்.
இவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள் 79 வயதுடைய விஜயராகவன் என்பவரும் 75 வயதுடைய சுலோச்சனா என்பவருமே ஆவர்.
கேரளா உயர் கல்வி அமைச்சர் இந்த திருமணத்தைச் செய்து வைத்துள்ளார்.
இவர்களின் திருமணத்திற்கு பலரும் தமது வாழ்த்துகளை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.