பிரதான செய்திகள்

கண் சத்திரசிகிச்சையின் பின் பெண் உயிரிழப்பு!

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உள்ளான பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் ரவி குமுதேஷ் கூறுகையில், பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்தில் ஏற்பட்ட சிக்கலால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தேசிய கண் வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் சத்திரசிகிச்சையின் பின்னர் சுயநினைவின்றி உயிரிழந்ததாக நேற்று (05) தெரிவிக்கப்பட்டிருந்தது.

உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாயார் எனவும், மரணம் சந்தேகத்திற்குரியது எனவும் சுகாதார நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Related posts

கடந்த அரசாங்கத்தில் சிறந்த வடிகால் அமைப்பு திட்டம் அமுல்படுத்தப்படவில்லை -எஸ்.எம் மரிக்காா்

wpengine

சில அரசியல்வாதிகள் என்னைக் குறிவைத்து கிளப்பிய புரளிகளில் இதுவும் ஒன்றாகும்”

wpengine

மன்னார் நகர பிரதேச செயலகத்தின் சிறுவர் தின போட்டிகள் (படம்)

wpengine