உலகச் செய்திகள்செய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

கணவர்களைக் கொலைசெய்த 785 மனைவிகள்: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்..!

இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் மட்டும் 785 மனைவிகள் தங்கள் கணவர்களைக் கொலைசெய்துள்ளதாக ஒரு அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரத்தை சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இவை வெறும் அரிதான கதைகள் மட்டுமல்ல. அவை வளர்ந்து வரும், ஆபத்தான போக்கின் ஒரு பகுதியாகும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட திருமணங்கள் முதல் திகிலில் முடிவடைந்த மரணம் வரை இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் சோனம் ரகுவன்ஷியின் வழக்கு ஊடகங்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருந்தது. தேனிலவின் போது, தனது கணவரைக் கொலை செய்யத் மனைவி திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

மற்றொரு வழக்கில், ஒரு பெண் தன் துணையைக் கொலைசெய்து, நீல நிற டிரம்மில் அடைத்து வைத்திருந்தார்.

முன்பு மக்கள் பேய்களுக்கு பயந்தார்கள். இப்போது பலர் தங்கள் சொந்த மனைவிகளுக்கு பயப்படுவதாகச் சொல்கிறார்கள்.

இவ்வாறான சம்பவங்கள் திருமணத்தின் மீதான நம்பிக்கை அழித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த 785 வழக்குகள் பதிவான வழக்குகள் மட்டுமே. பயம், சமூக அழுத்தம் அல்லது ஆதாரமின்மையால் இன்னும் ஆயிரக்கணக்கான கதைகள் மௌனமாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

Related posts

குடும்ப அபிலாஷைகளின் பிரகாரம் எரிப்பதற்கோ அல்லது நல்லடக்கம் செய்வதற்கோ இடமளிக்கப்பட வேண்டும்

wpengine

அரசியலுக்காக இனவாதத்தை தூண்டும் விக்னேஸ்வரன்! கைது செய்ய வேண்டும்

wpengine

வெளிமாவட்டத்தில் இருந்து வடக்கில் இருக்கின்றவர்களுக்கு பரிசோதனை!

wpengine