பிரதான செய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தினால் பயணிகள் மத்தியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்குச் சென்ற பயணி ஒருவர் கவசத்துடன் கூடிய ஆடையொன்றை அணிந்து சென்றுள்ளார்.

இதனை அவதானித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்துள்ளனர்.

எனினும் சோதனை செய்வதற்கு அவர் மறுத்துள்ளார். இதனையடுத்து விமான படையினர் நிலத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

இறுதியில் முதுகு எலும்பு சம்பந்தப்பட்ட நோய் காரணமாக பாதுகாப்பான ஆடை அணிந்திருப்பதாக குறித்த பயணி தெரிவித்துள்ளார்.

விமான படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால், விமான நிலைய நுழைவுப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஐ.எஸ். தற்கொலை குண்டுதாரிகள் மேலும் தங்கியிருக்கலாம் என்ற அச்சம் காரணமாக சோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக விமான நிலையத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் உண்மையான மூளைசாலி யார்? மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

wpengine

தலைமன்னார்,முசலி,மடு போன்ற பிரதேசங்களை சுற்றுலாத்துறை மேம்படுத்த அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

பெப்ரல் அமைப்புக்கு அமைச்சர் பைசர் முஸ்தபா பதிலளிப்பு

wpengine