பிரதான செய்திகள்

கட்டாரில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு சிக்கல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கட்டாரில் இருந்து வரும் பயணிகள் நாணயங்களை மாற்றீடு செய்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

விமான நிலையத்திலுள்ள வங்கிகளில் கட்டார் ரியாலை இலங்கை ரூபாயாக மாற்றித்தர மறுக்கின்றமையே இதற்குக் காரணம் என, பயணிகள் முறையிட்டுள்ளதாக, விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை. ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கின் சில நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அறிவித்துள்ளன என, நேற்றையதினம் செய்திகள் வௌியாகின.

தீவிரவாதத்திற்கு கட்டார் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டியே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இதனையடுத்து, அந்தநாட்டுக்கான விமான சேவைகளை இடைநிறுத்துவதாக எமிரேட், பிளை துபாய், எதிஹாத் எயார்லைன்ஸ் ஆகியன அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காதலுக்காக மதம் மாறிய முஸ்லிம் பெண் சமூக வலைதளத்தில் வைரல்

wpengine

வடமாகாண மீள்குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? விக்னேஸ்வரனுக்கு எதிராக முறைப்பாடு

wpengine

பேஸ்புக் பாவனையாளர்களிடம் வேண்டுகோள்-உதய கம்மன்பில

wpengine