அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

கடவுசீட்டு பெற்றுக்கொள்ள இருப்போருக்கு முக்கிய எச்சரிக்கை..!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின், கடவுச்சீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அல்லது செயன்முறையை விரைவுபடுத்த தரகர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திணைக்களத்தின் வளாகத்திற்குள் அல்லது வெளியே செயற்படும் தரகர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்றும், கடவுச்சீட்டு கட்டணங்களுக்கு பணம் செலுத்தும் இடத்தில்
மாத்திரம் அதனை செலுத்தி உத்தியோகப்பூர்வ பற்றுச்சீட்டினை பெற்றுக்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வழமையான மற்றும் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவைகளுக்கான டோக்கன் அட்டைகள் தற்போது தினமும் காலை 6:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை வழங்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசு ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களில் மக்கள் பணம் 1600 கோடி ரூபா விரயம் . ..!

Maash

வரவு – செலவு திட்டம் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறும்போது, வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் .

Maash

வனபரிபாலன திணைக்களத்தில் வேலை வாய்ப்பு

wpengine