அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்துதான் பாதாள உலகம் இயங்கியது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமையப்பெற்றது முதல் பாதாள உலகத்திற்குச் செல்லும் கதவுகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால்தான் பாதாள உலக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும், இந்த மோதல்களில் ராஜபக்சர்களுக்கு எதிரான சாட்சிகளே உயிரிழப்பதாகவும் அவர் கூறினார்.

”பாதாள உலகம் தானாக உருவாகவில்லை. சரியான நிர்வாகம் இருந்திருந்தால் பாதாள உலகம் உருவாக்கப்பட்டிருக்காது.

இந்த நாட்டில் செயல்படும் பாதாள உலகம் கடந்தகால அரசியல் அமைப்புகளுடன் தொடர்புடையவை. பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியாது.

தற்போது இடம்பெறும் பாதாள உலகக் கொலைகள் அனைத்தும் சாட்சியங்களாகும். கடந்த அரசாங்கங்களின் காலத்தில் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்துதான் பாதாள உலகம் இயங்கியது.” என்றும் கூறினார்.

Related posts

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரணம் இரத்தினபுரியில் அமைச்சர் றிஷாட்!

wpengine

19 ஆம் திகதி பள்­ளி­வா­ச­லுக்கும்,காணிக்கும் எதி­ராக ஆர்ப்­பாட்டம்! பாது­காப்­பு கோரிய ஏ.எச்.எம். பௌஸி

wpengine

மக்கள் செல்வாக்கை இழந்த சாய்ந்தமருது ஜெமிலின் அறிக்கை

wpengine