பிரதான செய்திகள்

கஞ்சிபானி இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து அலைபேசி மற்றும் சிம் அட்டை

கஞ்சிபானி இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து அலைபேசி மற்றும் சிம் அட்டை உள்ளிட்ட சில பொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள்  மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து  விசேட தேடுதல் நடவடிக்கையில் நேற்று (01) ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது காஞ்சிபனி இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து அன்ரோய்ட் ரக அலைபேசி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிம் அட்டைகள் இரண்டும்  அலைபேசி சார்ஜரும் மீட்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த காலங்களிலும் கஞ்சிபானி இம்ரான் தடுத்து வைக்கப்பட்ட சிறைக்கூடத்தில் இருந்து அலைபேசி உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய ஆளுநர்கள் நியமனம்! வடமேல் ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமனம்

wpengine

”காணி உறுதிகளோ! அல்லது வேறு எந்த மோசடிகளோ! விமலுக்கு சவால் விடுக்க விரும்புகிறேன்

wpengine

கொடுர யுத்தம் பொருளாதாரத்தை நாசமாக்கியது! இனங்களுக்கிடையிலான நல்லுறவை சீர்குலைத்தது அமைச்சர் றிஷாட்

wpengine