பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் மன்னாரில் மூவர் கைது

மன்னார் நிருபர் லெம்பட்-

மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆறு பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் இன்றைய தினம் (18) காலை மன்னார் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை புலனாய்வு தகவலுக்கமைய மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் (01) கஸ்தூரி ஆராட்ச்சியின் பணிப்பில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி CI ஜெயதிலக, உப பொலிஸ் பரிசோதகர் திலங்க தலைமையிலான குழுவினரே சிப்பி ஆறு பாலத்திற்கு அருகாமையில் மறைத்து டிப்பர் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட மேற்படி 89 கிலோ 355 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

அதே நேரம் கேரள கஞ்சாவினையும், அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய டிப்பர் வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இதனை கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இவர்களில் இருவர் வவுனியா கூமாங்குளம் பகுதியையும் மற்றைய நபர் வவுனியா தவசிகுளம் பகுதியையும் சேர்ந்த 25, 44, 31 வயதுடைய நபர்கள் ஆகும்.

சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா,மற்றும் டிப்பர் வாகனம், மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Related posts

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதிவு உண்மைக்கு புறம்பானது என சுப்பர்மடம் மீனவர்கள் கவலை

wpengine

தம்புள்ள பள்ளிவாசல் காணி விவகாரம் ஜனாதிபதி தலையிட வேண்டும்-ஏ. எச்.எம். அஸ்வர்

wpengine

கல்முனை மாநகரத்தை துண்டாடும் தீர்மானம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

wpengine