பிரதான செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் 10 ஆம் திகதிக்கு முன்னர்

இம்முறை பொதுத் தேர்தலில் தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு பெற்றுத்தருவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை பொதுத் தேர்தலில் 2,771,980 வாக்குகளை பெற்று 47 ஆசனங்களை கைப்பற்றியது.

அதன்படி, அவருக்கு தேசிய பட்டியலில் 7 ஆசனங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், குறித்த ஆசனங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் தற்போதைய நிலையில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், குறித்த பெயர் பட்டியலில் எவ்வித உண்மையும் இல்லை என கட்சியின் பிரதிநிதியொருவர் அததெரணவிற்கு தெரிவித்திருந்தார்.

Related posts

பனாமாவில் பெயர் இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல: பாட்டலி

wpengine

மாடு குறுக்கே பாய்ந்தமையால் காருக்கும் தொலைதொடர்பு கம்பத்துக்கும் சேதம்

wpengine

லசந்த விக்ரமதுங்க கொலை சம்பந்தமான , சட்டமா அதிபர் குற்றச்சாட்டுக்களில் அரசாங்கம் தலையிட வேண்டும்.

Maash