பிரதான செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரின் உத்தரவை பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் கூட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் குருணாகலில் நடத்தப்பட உள்ள பொதுக் கூட்டத்தை நடத்த வேண்டாம்.

என கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

குருணாகலில் நடைபெறும் கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரின் உத்தரவை பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எனவும் இதனால், குருணாகலில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக்கொள்ள போவதில்லை எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கிளிநொச்சி கோர விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவன் – சாரதிக்கு 19ம் திகதி வரை விளக்கமறியல்!

Editor

இரண்டு பிரதான கட்சிகளும், பெரும்பான்மை வாக்குகளை மையமாக வைத்தே செயற்படுகின்றன ஐ.நா.விடம் கோரிக்கை

wpengine

மோடி உலக பிரபல 10 குற்றவாளிகளின் பட்டியலில்

wpengine