பிரதான செய்திகள்

எதிர்வரும் 28ம் திகதி முதல் GCE A/L செயன்முறை பரீட்சைகள்.

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் இம் மாதம் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

செயன்முறைப் பரீட்சைக்கான திகதி மற்றும் பரீட்சை நிலையம் குறித்த விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும், பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தேவைப்பட்டால் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk இல் அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை தீர்ப்பு! மஹிந்த ,ரணில் தொலைபேசி கலந்துரையாடல்

wpengine

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்-அமைச்சர் றிஷாட்

wpengine

தொடராக இரண்டு முறை பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத முசலி பிரதேச சபை செயலாளர்!

wpengine