Breaking
Thu. Apr 25th, 2024

சிகரெட்டிற்கான வரியை அதிகரிப்பது தொடர்பில் உடனடியாக அமைச்சரவை கவனம் செலுத்துமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிகரெட்களின் விலை, தனி நபர் வருமான அதிகரிப்புடன் விகிதாசார முறையில் அதிகரிக்கப்படவில்லை என பொருளியல் நிபுணர் ஒருவர் தெரிவித்த கருத்திற்கு பதில் வழங்கும் வகையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

உலக மது ஒழிப்பு தின பிரதான நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.13319823_10154088611896327_2827508006528451636_n

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இதன்போது பரிசில்களும் வழங்கப்பட்டன.13344782_10154088612191327_3525491397933562578_n

இதேவேளை, போதைப்பொருளுக்கு எதிரான கொடி ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது.13315450_10154088612226327_1577798902564456556_n

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *