பிரதான செய்திகள்

உரும்பிராய் யோகபுரம் அறநெறிப் பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் வைபவம்-சித்தார்த்தன்

யாழ் உரும்பிராய் யோகபுரம் ஆதி பராசக்தி அம்பாள் ஆலயத்திற்கு அருகிலுள்ள முன்பள்ளியில் அறநெறிப் பாடசாலை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேற்படி அறநெறி பாடசாலையினை நடாத்துவதற்கு ஒரு புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கும் வைபவம் நேற்று காலை (04.03.2017) நடைபெற்றது.

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நம்பிக்கை நிதியத்தினாலும், உரும்பிராயைச் சேர்ந்த லண்டனில் வாழுகின்ற அபிமானிகளாலும் மேற்படி அறநெறி பாடசாலைக் கட்டிடத்தை அமைப்பதற்கான நிதிப் பங்களிப்பு செய்யப்படவிருக்கின்றது. 
இக்கிராமத்து மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்கின்றார்கள். இந்த மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகள் மற்றும் கல்வி வசதிகளை செய்து கொடுப்பதிலும் லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நம்பிக்கை நிதியத்தினரும், உரும்பிராயைச் சேர்ந்த லண்டன் வாழ் அபிமானிகளும் முன்நிற்கின்றார்கள். 
லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நம்பிக்கை நிதியத் தலைவர் ஆர்.டீ ரட்ணசிங்கம், புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஆலய நிர்வாகிகளின் பங்குபற்றுதலுடன் மேற்படி அறிநெறி பாடசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. 

Related posts

ஜனாஸா எரிப்பு விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால் நாடுபூராகவும் தொடரும் போராட்டம்!!!

wpengine

சமுர்த்தி ஊடாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

wpengine

மன்னாரில் ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வு!!

wpengine