செய்திகள்பிரதான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு கொலையாளிகள் உடன் வெளிப்படுத்து – நீதி கோரி ஆர்ப்பாட்டம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஆறு வருடங்கள் நிறைவடைய ஒரு மாதம் இருக்கும் நிலையில் நேற்று (21) மாலை கொழும்பு- புத்தளம் பிரதான வீதியில் கட்டுவபிட்டிய சந்தியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி அமைதி ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

“திட்டமிட்டவர்கள், சுத்திரதாரிகள், கொலையாளிகள் உடன் வெளிப்படுத்து” எனும் தொனிப்பொருளில் நீர்கொழும்பு பிரஜைகள் முன்னணி ஏற்பாடு செய்த இவ் ஆர்ப்பாட்டத்தில்  ஆணைக்குழு பரிந்துறைகளை உடனே வெளிப்படுத்து,  உயிர்த்த ஞாயிறு கொலையாளிகள் இன்னும் சுதந்திரமாக உள்ளனர், அரச பலத்தை பெற்றுக்கொள்ள ஒருங்கமைந்த திட்டமிட்ட படுகொலையே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்,  ஆணைக்குழுக்கள் மேலும் வேண்டாம் உண்மையை உடனே வெளிப்படுத்து, 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நீதி இன்னும் தாமதம், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின சகல பிரிவுகளையும் பகிரங்கப்படுத்து போன்ற சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி நின்றனர்.

   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், 

ஒரு அரசாங்கம் படுகொலை செய்தது. இந்த அரசாங்கம் அதனை அப்படியே வைத்துள்ளது. அரசாங்கத்திடம் தகவல்கள் உள்ளன. ஏன் இன்னும் சூத்திரதாரிகளை கைதுசெய்யவில்லை.  அறிக்கையின் அடிப்படையில் கைது செய்யலாம். நீதிமன்றம் செல்லலாம். தயவுசெய்து ஜனாதிபதியிடம் கேட்பது ஆறு வருடம் நிறைவடைவதற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தையும் குற்றவாளிகளுக்கு தண்டனையையும் பெற்றுப் கொடுங்கள். தேர்தல் காலத்தில் நடுவீதியில் கூறினார்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு கட்டாயம் நியாயத்தை பெற்றுத் தருவதாக ஏன் இன்னும் மெளனம் என வினவினார்.

Related posts

தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழா-

wpengine

மன்னார் நகர சபையின் செயற்பாட்டால் போக்குவரத்து சேவைகள் பாதிப்பு..! MANNAR NEWS

Editor

சிங்கள,புத்தாண்டு சமுர்த்தி,குறைந்த வருமானம் குடும்பங்களுக்கு 5000 ரூபா

wpengine