பிரதான செய்திகள்

உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள், பிரத்தியேக வகுப்புகள், மாதிரி வினாத்தாள் விநியோகம் மற்றும் பயிற்சி பட்டறைகள் அனைத்தும் இம் மாதம் 27 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் ஆகஸ்ட் 27 ஆம் தகதிவரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விசேட விரிவுரைகள் மற்றும் வரிவுரைகள் தொடர்பாக ஊடகங்களின் மூலம் விளம்பரப்படுத்தும் செயற்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக  பரீட்சைகள்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை  தடைகளை மீறும் பட்சத்தில் குறித்த குற்றங்களை புரியும் தனிநபர் அல்லது கல்வி நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஒரே வகையான அரிசிக்கு இரண்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டது ஏன்? தகவல் திணைக்கள ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் விளக்கம்

wpengine

அரசியல் பழிவாங்கப்படும் எதிர்க்கட்சியினர் : விமல்

wpengine

சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி

wpengine