பிரதான செய்திகள்

உதய கம்மன்பில,முஸ்ஸமில் தொடர்பில் பெங்கமுவே நாலக தேரர் கருத்து

பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதான செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர், உதய கம்மன்பில மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர், மொஹமட் முஸ்ஸமில் ஆகியோர் கைது செய்யப்பட்டமை குறித்து இன்று கொழும்பில் இடம்பெற்ற இரண்டு ஊடக சந்திப்புகளில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்கம் முகம்கொடுத்துள்ள நெருக்கடி நிலையை மறைப்பதற்கு இவ்வாறான கைதுகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெவித ஹன்ட அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பிரதிநிதி பெங்கமுவே நாலக தேரர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸ்ஸமில் கைது செய்யப்பட்டமை, சுதேசத்திற்கு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சேபனை காரணமாகும் என தெரிவித்துள்ளார்.

Related posts

மாந்தை மேற்கு பிரதேசத்தில் 800 ஏக்கர் காணிக்கு போலி ஆவணம்! வெளிநாட்டு நிறுவனம் அன்னாசி தோட்டம் பிரதேச செயலாளர் குற்றச்சாட்டு

wpengine

யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Maash

 குடி நீர் குறித்து  மக்கள் அச்சமடையத் தேவையில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாரத்ன தெரிவித்தார்.

Maash