நாட்டு மக்களுக்கு இன்று 14.06.2025 ஈரானியத் தலைவர் ஆற்றிய உரை, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
எனது அன்பான மற்றும் மாண்புமிக்க ஈரான் மக்களுக்கு வணக்கம். அன்பு தளபதிகள் மற்றும் அறிஞர்களின் வீரமரணம், நிச்சயமாக அனைவருக்கும் கனமானது, மேலும் சில பொதுமக்களின் இழப்புக்கு ஈரான் மக்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் எனது வாழ்த்துகளையும் ஆறுதலையும் தெரிவிக்கிறேன். இறைவன் அவர்களின் புனித ஆன்மாக்களை தனது சிறப்பு கருணையால் உயர்த்துவானாக என்று நம்புகிறேன்.
நான் எனது அன்பு மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் விஷயம், சியோனிஸ்ட் ஆட்சி ஒரு பெரிய தவறு செய்துவிட்டது, மிகப்பெரிய பிழையைச் செய்தது, ஒரு மோசமான செயலைச் செய்தது. இறைவனின் அருளால், அதன் விளைவுகள் அவர்களை பரிதாபகரமான நிலைக்கு ஆளாக்கும். ஈரான் மக்கள் தங்கள் விலைமதிப்பற்ற வீரர்களின் இரத்தத்தை மன்னிக்க மாட்டார்கள், தங்கள் வான்வெளி மீறப்பட்டதை புறக்கணிக்க மாட்டார்கள். எங்கள் ஆயுதப் படைகள் தயாராக உள்ளன, நாட்டின் பொறுப்பாளர்களும் அனைத்து மக்களும் ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக உள்ளனர். இன்று நாட்டின் பல்வேறு அரசியல் பிரிவுகளிலிருந்தும், மக்களின் பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஒரே மாதிரியான செய்திகள் வெளிவந்துள்ளன. இழிவான, கயவர், பயங்கரவாத சியோனிஸ்ட் அடையாளத்துக்கு எதிராக வலிமையுடன் செயல்பட வேண்டும் என்று அனைவரும் உணர்கிறார்கள்.
வலிமையுடன் செயல்பட வேண்டும், இறைவனின் அருளால் வலிமையுடன் செயல்படப்படும், அவர்களுடன் எந்த சமரசமும் செய்யப்படாது. அவர்களுக்கு வாழ்க்கை கசப்பானதாக மாறும், இதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் தாக்கிவிட்டு முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம். இல்லை. இந்தப் போரை அவர்கள்தான் தொடங்கினார்கள், அவர்கள்தான் போரை உருவாக்கினார்கள். அவர்கள் செய்த இந்த மாபெரும் குற்றத்திலிருந்து தங்களைப் பாதுகாப்பாக விடுவித்துக் கொள்ள நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஈரான் குடியரசின் ஆயுதப் படைகள் இந்த இழிவான எதிரிக்கு கடுமையான அடிகளை வழங்கும். மக்களும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர், ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக உள்ளனர், இறைவனின் அருளால் ஈரான் குடியரசு சியோனிஸ்ட் ஆட்சியை வெல்லும்.
அன்பு மக்களே, இதை அறிந்து உறுதியாக நம்புங்கள், இந்த விஷயத்தில் எந்தக் குறையும் ஏற்படாது என்று மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வஸ்ஸலாம் அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு
(தமிழாக்கம் செய்தவர்களுக்கு நன்றி)