பிரதான செய்திகள்

இஸ்லாமிய தீவிரவாதத்தை நாட்டிலிருந்து ஒழிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடக முகவர் நிறுவனமான ரொய்ட்டர்ஸிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவதன் மூலமாக நாட்டில் மீண்டும் புலனாய்வுப் பிரிவை கட்டியெழுப்பி, இஸ்லாமிய தீவிரவாதத்தை நாட்டிலிருந்து ஒழிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தொடர்ச்சியாக குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ள இந்நேரத்தில் கோத்தபாயவின் அறிவிப்பு வெளிவந்துள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இக் குண்டுத் தாக்குதல்களை ராஜபக்ச தரப்பினர் தங்களுக்கு சாதகமாக்கி தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொள்வதற்கு முயற்சிப்பார்கள் என்றும் எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எழுச்சி அரசியலிலுள்ள யதார்த்தங்கள் எடுகோள்களால் தீர்மானிக்கப்படுகிறதா?

wpengine

ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு இலங்கையில் எதிர்ப்பு

wpengine

ஊரடங்கு உத்தரவு தளர்வு முல்லைத்தீவில் அலைமோதிய மக்கள் கூடடம்

wpengine