செய்திகள்பிரதான செய்திகள்

இஸ்ரேல் பரக்க உள்ள 29 பெண்கள்..!

வீட்டு பராமரிப்பாளர்களாக, 29 இலங்கைப் பெண் பணியாளர்களைக் கொண்ட குழு ஒன்று எதிர்வரும் 7 ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் இஸ்ரேலுக்குப் புறப்பட உள்ளது.

அவர்களுக்கான, விமான பயணச்சீட்டுக்களை உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு நேற்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்றது.

இதனிடையே, இந்த ஆண்டில் இதுவரை, 379 இலங்கை பராமரிப்பாளர்கள் இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

இதேவேளை, பயிற்சி பெற்ற பராமரிப்பாளர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு, இரு அரசாங்கங்களுக்கிடையேயான இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 2,269 இலங்கையர்கள் இஸ்ரேலில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Related posts

மஹிந்த ராஜபக்ஸ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுத்தாக்கல்

wpengine

நல்ல சிந்தனையோடும், தூரநோக்குடனும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது அமைச்சர் றிஷாட்

wpengine

சென்னை விமான நிலையத்தில் இலங்கையர்கள் இருவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

Editor