அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

இழப்பீட்டு விபரங்களை வெளியிடும் தரப்பினர்கள் எமது வீடுகளுக்கு தீ வைத்தார்கள். தீ வைத்தவர்கள் விபரங்கள் எங்கே ?

அரகலய வன்முறையில் தனது  வீடு தீக்கிரையாக்கப்பட்டமைக்கு ஆளும் தரப்பினரே காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே குற்றம் சுமத்தியுள்ளார்.

வீட்டை புனரமைக்க 54 மில்லியன் ரூபாவை இழப்பீடாக பெற்றுக் கொண்டேன் எனவும், இதில் யாருக்கு என்ன பிரச்சினை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், 

“மே 09 வன்முறையில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவுடன் தான் அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

150 மில்லியன் ரூபா செலவழித்து நான் வீட்டை நிர்மாணித்தேன். கலவரத்தின் போது எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது.

ஆகவே வீட்டை நிர்மாணிப்பதற்கு 54 மில்லியன் ரூபாவை இழப்பீடாக பெற்றுக் கொண்டேன். இதில் யாருக்கு என்ன பிரச்சினை.

இழப்பீட்டு தொகை பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களை வெளியிடும் தரப்பினர்கள் தான் எமது வீடுகளுக்கு தீ வைத்தார்கள்.

முடிந்தால் அவர்களின் பெயர்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்” என்றார்.

Related posts

10 கட்சிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல்

wpengine

இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க நாணயம்,முத்திரை வெளியீட நடவடிக்கை

wpengine

2025ஆம் ஆண்டில் 5லச்சம் வீட்டு திட்டம் சஜித்

wpengine