பிரதான செய்திகள்

இளம் மனைவிக்கு கணவன் செய்த கேவலம்! 23ஆம் திகதி விளக்கறியல்

இளம் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை அவரை பயன்படுத்தி எடுத்து, அதனை தனது செல்போனில் பதிவேற்றி, பிற நபர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொண்ட ஒருவரை புத்தள பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மனைவி மீது சந்தேகம் கொண்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து 24 வயதான இளம் பெண் புத்தள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

மின்சாரக் கட்டண குறைப்போடு ஒப்பிட்டு, நீர் கட்டணமும் குறைப்பு . !

Maash

பிரான்ஸ் அகதிகள் , குடியுரிமை அற்றோருக்கான பாதுகாப்பு அலுவலக பிரதிநிதிகளுக்கும், ACMC பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு .!

Maash

அஸ்வெசும பெறாத முதியவர்களுக்கும் 3,000 ரூபாய் கொடுப்பனவு…

Maash