பிரதான செய்திகள்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு விளக்கமறியல்!

பனை மரத்தை வெட்டிய நபரிடம் இருந்து 15,000 ரூபாவை பலவந்தமாக பெற்றுக்கொண்ட பொலிஸ் சார்ஜன்ட்கள் இருவரை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மூதூர் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி இந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களும் சிவில் உடையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது, ​​அந்த நபர் மரத்தை வெட்டிக் கொண்டிருந்தார். குறித்த நபரை விடுவிக்க முப்பதாயிரம் ரூபா பணம் தேவையென தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், அந்த தொகையை பனைமரம் வெட்டியவர் வழங்க தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் குறித்த நபரிடம் இருந்து அதிகாரிகள் 15,000 ரூபாயை பலவந்தமாக பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பிரதமருக்கு 5000 ரூபா உதவி செய்த 86 வயதான முதியோர்

wpengine

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அமைச்சர் ரிஷாட் அவசரக் கடிதம்!

wpengine

பரீட்சை எழுத வேண்டுமா? உள்ளாடைகளைக் கழற்றிவிட்டு வருமாறு கூறிய ஆசிரியர்கள்

wpengine