தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக பேஸ்புக் செயற்படுகின்றன

இலங்கையில் பேஸ்புக்கின் செயற்பாடுகள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அமெரிக்க நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பேஸ்புக்கின் செல்வாக்கு மற்றும் இலங்கையின் பேஸ்புக் பயன்பாடு என்பன தொடர்பாக லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஆய்வு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஏற்கனவே அவர்களுக்கு எதிராக காட்டப்பட்டு வந்த வெறுப்பூட்டும் செயற்பாடுகள் காரணமாக இருந்ததாக அது தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பேஸ்புக்கின் செயற்பாடுகள் அந்த வெறுப்பூட்டல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அதில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

இறுதியில் இணையங்கள் தொடர்பில் இலங்கையின் அரசாங்கம் தேசியக் கொள்கை ஒன்றை வகுத்து இனங்களுக்கு எதிரான வெறுப்பூட்டலை தவிர்க்க முடியும் என்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Related posts

வன்னி மாவட்ட அரசியல்வாதிகளின் கவனத்திற்கு!!! வவுனியாவில் போராட்டம்

wpengine

கற்பிட்டி பிரதேச மீனவர்களுக்காக கடற்தொழில் பிரதி அமைச்சரை சந்தித்த ஆஷிக்

wpengine

எதிர்க்கட்சியின் ஏளனமான எழுகைகள்

wpengine