தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை

இலங்கையில் பயன்பாட்டிலுள்ள கணனிகளை புதிய வகை வைரஸ் தாக்கி வருவதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரித்துள்ளது.
விண்டோஸ் இயங்கு தளம் ஊடாக இந்த வைரஸ் பரவி வருவதாக தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

விண்டோஸ் 7/ 8.1 மற்றும் 10 ஆகிய இயங்கு தள அமைப்புகளுக்கு இதன் ஊடாக பாதிப்பு ஏற்படக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரம்பா என பெயரிடப்பட்டு இந்த வைரஸ், இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் ஊடாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக கணனியில் சேமித்து வைக்கப்படும் அத்தியவசியமான தரவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் ஆபாயம் காணப்படுகின்றது. இதன் காரணமாக பலரின் இரகசிய தரவுகள் களவாடப்படும் ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் இயங்கு தள அமைப்புக்களை புதுப்பித்திருந்தால் இந்த வைரஸ்ஸால் பாதிப்பு ஏற்படாது என இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

காதலனை கரம்பிடிக்க அரச குடும்ப அந்தஸ்தை இழக்க இருக்கும் ஜப்பான் இளவரசி

wpengine

சுதந்திர நிகழ்வுக்கான நடவடிக்கையில் மன்னார் அரசாங்க அதிபர்

wpengine

அரச குடும்பத்தினரின் அரண்மனை அருகே துப்பாக்கிப் பிரயோகம்

wpengine