பிரதான செய்திகள்

இலங்கையை ஸ்திரமான மற்றும் நிலையான வளர்ச்சிப் பாதையில் விரைவில் கொண்டு செல்ல நடவடிக்கை

இலங்கையை ஸ்திரமான மற்றும் நிலையான வளர்ச்சிப் பாதையில் விரைவில் கொண்டு செல்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்பாட்டை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உறுதி செய்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடனான இருதரப்பு கலந்துரையாடலின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த கூட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட கடினமான ஆனால் அவசியமான சீர்திருத்தங்களுக்காக அரசாங்கத்தைப் பாராட்டியுள்ளார்.

அத்துடன், விரைவில் நாட்டை ஸ்திரமான மற்றும் நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உறுதி செய்துள்ளார்.

Related posts

மன்னார், தாராபுரம் ரூஹானிய்யா அரபுக் கல்லூரியின் ஆலிமாக்களுக்கான பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக ரிஷாட்!

Editor

மண்ணுக்காக போராடும் நாம் நீருக்காக போராடும் நிலை உருவாகும் – இரா.சாணக்கியன் எச்சரிக்கை!

wpengine

நேரடி வர்த்தகம் மற்றும் நிறுவனங்களின் பதிவு குறித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

Editor