பிரதான செய்திகள்

இரா.சம்பந்தனுக்கு எதிரான விசாரணை

எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கிளிநொச்சி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி – பரவிபாஞ்சானில் உள்ள இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 16ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் ஒன்றை அடுத்து, அவர்கள் குறித்த முகாமிற்குள் பிரவேசித்ததாக கூறப்படுகிறது.

இது சம்மந்தமாக முகாமின் அதிகாரிகளால் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

4 மாவட்டங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம்!-காஞ்சன விஜேசேகர-

Editor

வன சரணாலய வர்த்தமானிப் பிரகடனத்தை வாபஸ் பெற உதவுங்கள் பெரேரா ,றிஷாட் வங்காலை மக்கள் கோரிக்கை.

wpengine

வடக்கில் சுத்தமான குடிநீரைப் பெற வடமாகாண சபை பாராளுமன்ற உறுப்பினர்களது ஒத்துழைப்பு அவசியம் -பிரதி பொது முகாமையாளர்

wpengine