பிரதான செய்திகள்

இரா.சம்பந்தனுக்கு எதிரான விசாரணை

எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கிளிநொச்சி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி – பரவிபாஞ்சானில் உள்ள இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 16ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் ஒன்றை அடுத்து, அவர்கள் குறித்த முகாமிற்குள் பிரவேசித்ததாக கூறப்படுகிறது.

இது சம்மந்தமாக முகாமின் அதிகாரிகளால் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

அமெரிக்க இராஜாங்க செயலாளர் கட்டார் விஜயம்

wpengine

Braking News முஸ்லிம் பகுதியில் கருப்புக்கொடி

wpengine

பட்டலந்த போல வடக்கு கிழக்கில் இயங்கிய பல முகாம்களில் தமிழர்கள் படுகொலை…!

Maash