பிரதான செய்திகள்

இராஜினாமா செய்யவுள்ள திலங்க சுமதிபால

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால பதவியை ராஜினாமா செய்வதாக தனக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக திலங்க சுமதிபால கூறியதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அதேவேளை பதவி விலகும் கடிதத்தை ஒரு மாதத்திற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதி சபாநாயகர் தனது பணிகளை முன்னெடுக்க இடமளிக்க போவதில்லை என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்தே சபாநாயகர் இதனை கூறியுள்ளார்.

Related posts

மஹிந்த ராஜபக்ஷ உடல்நிலையில் நலமாக இருக்கின்றார் – நாமல் ராஜபக்ஷ

Maash

ஹமாஸ் போராளிகள் மீது வான் தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேல்

wpengine

மன்னார் காற்றாலை திட்டத்தை திறந்து வைத்த மஹிந்த

wpengine