பிரதான செய்திகள்

இராஜாங்க அமைச்சரின் பணிகளை கூட செய்யமுடியவில்லை பிரதமரிடம் முறைப்பாடு

தொழில் அமைச்சில் உள்ள உயர் அதிகாரிகள் தனது பணி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல இடமளிப்பதில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன முறைப்பாடு செய்துள்ளார்.


பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். தான் நடத்தும் கூட்டங்களை காணொளியாக பதிவு செய்ய அதிகாரிகளை அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.


வெளிநாட்டு வேலை வாய்ப்பு பயணிகத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்களுடன் இந்த கூட்டம் நடைபெற்றது.


அழைப்பு விடுக்கப்படாத நபர் ஒருவர் வந்து கூட்டத்தை காணொளியாக பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வனவிலங்கு கணக்கெடுப்பு துல்லியமற்றவை, மீண்டும் கணக்கெடுக்கும் நிலை .

Maash

அரச கரும மொழி தேர்ச்சி! அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

wpengine

கல்பிட்டி பகுதியில் 9கோடிக்கு மேல் தங்க கட்டிகள்

wpengine