பிரதான செய்திகள்

இன்று 4மணிக்கு இறுதி தீர்ப்பு வெளிவரும்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை எதிரான மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைப்பது தொடர்பான வெளியிட்ட வர்த்தமானிக்கு ஆட்சேபம் தெரிவித்து உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் இணைந்து மனுக்களை தாக்கல் செய்தன.

மனுக்கள் தொடர்பில் நீண்ட விசாரணையின் பின்னர் இன்று மாலை தீர்ப்பு அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க வழக்கின் தீர்ப்புக்காக உள்நாடு மற்றும் சர்வதேச நாடுகளும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புத்தளம்- இலவங்குளம் பாதையிலுள்ள பாலங்களை அமைக்க அனுமதி! அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

தெற்கு ஊடகவியலாளா்கள் – முதலமைச்சா் விக்னேஸ்வரன் சந்திப்பு

wpengine

குடும்ப அபிலாஷைகளின் பிரகாரம் எரிப்பதற்கோ அல்லது நல்லடக்கம் செய்வதற்கோ இடமளிக்கப்பட வேண்டும்

wpengine