செய்திகள்பிரதான செய்திகள்

இந்த ஆண்டில் இதுவரை 816,191 சுற்றுலாப் பயணிகள் வருகை – அதிகமான பயணிகள் இந்தியாவிலிருந்து.

ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 93,915 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 816,191 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் இவர்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், கடந்த ஆண்டில் மொத்தமாக 2,053,465 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

கடமை நேரத்தில் அரச பணியாளர்கள் முகநூல் பயன்படுத்தக் கூடாது

wpengine

தேர்தல் இல்லாட்டி இராஜினமா

wpengine

சிறு போக பயிர்ச்செய்கைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தி, தட்டுப்பாடின்றி உரம் வழங்க தீர்மானம் .

Maash