பிரதான செய்திகள்

இதுவரை 29000 பேர் இணையவழி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம்!

நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் இணையவழி கடவுச்சீட்டு முறைமை மூலம் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில்,, அவர்களில் 24 ஆயிரத்து 285 பேர் சாதாரண முறைமையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒரு நாள் சேவையின் மூலம் 5 ஆயிரத்து 294 பேர் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பிரதேச செயலகங்கள் மூலம் இணையத்தளத்தின் ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டமையினால் பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திலும் நீண்ட வரிசைகள் இல்லாமல் போயுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார்! டிரான் அலஸ்

wpengine

விளக்கம் கோரியவர்களுக்கு சாப்பாடு கொடுத்த ஹக்கீம்! அரசியல் நாடகம்

wpengine

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

Editor