Breaking
Wed. Apr 24th, 2024

இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பண பரிவர்த்தனையின் போது சுமார் 17 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் நிதி மோசடி செய்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று களனி குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாடொன்றிற்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக குறித்த குழு கைது செய்யப்பட்டுள்ளது.

பரிசுத் தொகை கிடைத்துள்ளதாக தெரிவித்து குறித்த தொகையினை வைப்பிலிடுமாறு கூறி குறித்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

களனி குற்றவியல் விசாரணை பிரிவினரால் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின போது பல்வேறு சிம் அட்டைகளை பயன்படுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றில் மேற்கொள்ளப்படும் குறித்த நிதி மோசடி தொடர்பில் தெரியவந்துள்ளது.

அதன்படி, நைஜீரியா நாட்டை சேர்ந்த 4 ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த தம்பதியினர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *