பிரதான செய்திகள்

ஆலய அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கிய வடமாகாண சபை உறுப்பினர் குணசீலன்

வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தனது மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் அடம்பன் காத்தான்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தின் கட்டிடப்பணிக்காக நிதியினை நேற்று (11) காலை வழங்கி வைத்தார்.

அடம்பன் காத்தான்குளம் புனித சூசையப்பர் ஆலயத்திற்கு  ஞாயிற்றுக்கிழமை காலை விஜயம் செய்த மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ. குணசீலன் குறித்த ஆலயத்தின் கட்டிடப்பணிக்கான ஒரு தொகுதி நிதியினை ஆலயத்தின் பங்குத்தந்தை வசந்தகுமார் அடிகளாரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் ஆலய சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊடகவியலாளர்களுக்கான முதலாவது இப்தார் நிகழ்வு

wpengine

ரணில் என்பவர் கல் விலாங்கு மீன் போன்றவர்! மஹிந்த கவலை

wpengine

கிண்ணியா,மூதூர் பிரதேச உள்ளுர் அரசியல்வாதி றிஷாட்டின் கட்சியில் இணைவு

wpengine