பிரதான செய்திகள்

ஆறுமுகம் தொண்டமானுக்கு சவால் விடுக்கும் வகையில் முரளிதரன் நுவரெலியாவில்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அரசியலில் நுழைய தயாராகுவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மூலம் அவர் தனது அரசியல் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆறுமுகம் தொண்டமானுக்கு சவால் விடுக்கும் வகையில் முரளிதரன் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தை தெரிவு செய்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற கோத்தபாயவின் வியத்மக மாநாட்டில் கலந்துகொண்டு அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடப்படுகின்றது.

Related posts

காணிப்பிரச்சினை விரைவில் தீர்வு கிடைக்கும்! மூன்றாம் தரப்பை கொண்டுவர வேண்டாம் அமீர் அலி

wpengine

புத்தாண்டை முன்னிட்டு விசேட பேரூந்து மற்றும் புகையிரத சேவைகள்!

Editor

வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யக்கோரி அமைச்சர் றிஷாட் கோரிக்கை

wpengine