பிரதான செய்திகள்

‘அஸ்வெசும’ திட்ட மேல்முறையீட்டுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

‘அஸ்வெசும’ சமூக பாதுகாப்பு நலன்புரித் திட்டம் தொடர்பான மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (10) நிறைவடைகின்றது.

மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் இணையம் மூலமாகவும் நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

இது தொடர்பில் இதுவரை 815,000 மேல்முறையீடுகளும் 11,000 ஆட்சேபனைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

‘அஸ்வெசும’ திட்டம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் விசாரணைகளுக்கு, பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ‘1924’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எல்லப்பர் மருதங்குளம் முதியோர் இல்லத்திற்கு விசேட மதிய உணவு வழங்கல்

wpengine

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வர காரணம் தாஜூடீன் கொலை பற்றி பேசியதால்

wpengine

தண்ணீர் தொட்டியில் வாலிபர் பிணம்: உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

wpengine