பிரதான செய்திகள்

அவசர நிதிகளை பெறுவதில் இருந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு தடை

கொரோன வைரஸ் நிவாரணங்களுக்காக அவசர நிதிகளை பெறுவதில் இருந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் தேர்தல்களை மையப்படுத்தி இந்த நிதிகளை பயன்படுத்தி விடுவார்கள் என்ற அச்சத்திலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து மாகாண ஆளுநர்கள் திறைசேரியிடம் இருந்து அவசர நிதிகளை திருப்பி செலுத்தும் உறுதியில் பெற்று அவற்றை உணவு விநியோகத்துக்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதிக்கு தெளிவுப்படுத்திய நிலையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


இதேவேளை உள்ளூராட்சி மன்றங்கள் அரச சார்பற்ற அமைப்புக்களின் உதவிகளை தமது உணவு விநியோகத்துக்காக பெற்றுக்கொள்ள முடியும் என்று செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அதிகாலை வேன் மீது யானை தாக்குதல்! ஓருவர் மரணம் 10 பேர் வைத்தியசாலையில்

wpengine

காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் நிர்மாணிக்கப்ட்ட வகுப்பறை மற்றும் தங்குமிட விடுதிக்கான இரு மாடிக் கட்டிடங்கள் இரண்டும் திறந்து

wpengine

தட்டிக்கேட்டால் துரோகிகள்! ஜால்ரா போட்டால் போராளிகள்! கந்தளாயில் அமைச்சர் ரிஷாட்

wpengine