பிரதான செய்திகள்

அறிவித்தல் இன்றி மின்சார தடை! முசலி மக்கள் விசனம்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் இன்று அறிவித்தல் இல்லாத மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக முசலி பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

முசலி பிரதேசத்தில் உள்ள கரையோர பகுதியான அரிப்பு,சவேரியார்புரம்,வெள்ளிமலை,சிலாவத்துறை போன்ற பல இடங்களிளும் முசலி பிரதேசத்தில் உள்ள அரச திணைக்களங்களிலும் மின்சாரம் தடைபெற்றதன் காரணமாக பல அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள  இலங்கை மின்சார சபை அதிகாரிகளின் அசெளமந்த போக்கின் காரணமாகவே! இப்படியான பிரச்சினைகளுக்கு முசலி பிரதேச மக்கள் முகம்கொடுக்க வேண்டி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

பாவனையாளர்களின் செளசரியங்களை குறைத்துக்கொள்ளும் நோக்குடன் மின்னார சபை ஊழியர்,அதிகாரிகள் மக்களுக்கு தெரியப்படுத்தி மின்சார திருத்த வேலைகளை செய்யுமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.unnamed-3

Related posts

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது அவசியம் எரிசக்தி அமைச்சர்

wpengine

வடக்கு,கிழக்கு இணைப்பு கைவிடுதல்,பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கூட்டமைப்பு இணக்கம்

wpengine

தனிக்கட்சியாக போட்டியிட்டு வெற்றிபெற முடியாத அரசியல்வாதிகள் மகிந்தவை சூழ்ந்துள்ளனர்: பண்டார

wpengine