பிரதான செய்திகள்

அரிசி பதுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டால்! கடுமையான சட்ட நடவடிக்கை-அமைச்சர் றிஷாட்

அரிசி இறக்குமதி தொடர்பில் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.

அரிசி குறிப்பிட்ட தொகையில் மாத்திரமே இறக்குமதி செய்யப்படும்.

இவ்வாறு இறக்குமதி செய்யும் போதிலே உரிய விலையில் அதனை நுகர்வோருக்கு வழங்க முடியும்.

போதுமான அளவு அரிசி இருக்குமாயின் அரசாங்கம் ஒருபோதும் இறக்குமதிக்கு அனுமதி வழங்காது.

இதுபோல் சிலர் அரிசியினை பதுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டால், அதுகுறித்து 1977 என்ற நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவித்தால் அவர்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் எச்சரிக்கை விடுத்தார்.

Related posts

நான் தெரிவிக்கவில்லை! நான் எப்போதும் எனது மக்கள் சார்பாக இருப்பேன்-யோகேஸ்வரன்

wpengine

ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு!

Editor

வடக்கு, கிழக்கில் சிதைவடைந்துள்ள பாதைகள், பாலங்களை புனரமையுங்கள்! றிசாட் எம்.பி. கோரிக்கை .

Maash