பிரதான செய்திகள்

அரச நிறுவனங்களின் நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பம்

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் இந்த வார இறுதி வரை தொடர்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த காலப்பகுதியில் மக்கள் செயற்படும் முறை தொடர்பில் ஆராயந்து நிறுவன மட்டத்தில் எதிர்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், களுத்துறை மற்றும் புத்தளம் உட்பட 23 மாவட்டங்களுக்கு நேற்று தளர்த்தப்பட்டுள்ளது.


ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு திரும்பும் நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள அரச நிறுவனங்களின் நடவடிக்கைகள் இந்த வார இறுதி வரை மேற்கொள்வதற்கு பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த காலப்பகுதியில் மக்களின் செயற்பாடு தொடர்பில் ஆராய்ந்து பார்த்து நிறுவன மட்டத்தில் எதிர்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் அதிகளவான இடம்மாற்றங்கள் வழங்கப்பட்ட முதல் சந்தர்ப்பம்.

Maash

அனுதாபம் கூறி – தான் ஒரு இனவாதியல்ல என்ற பாசாங்கை வெளிப்படுத்தி முடிச்சும் போட்டார் மனோ.

wpengine

மூன்று ஆண்டுகள் பூர்த்தியான வடமாகாண சபை மக்கள் கண்ட நன்மை என்ன? க.சிவநேசன்

wpengine