பிரதான செய்திகள்

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க இந்த முறை நடவடிக்கை

இலங்கையில் அரசாங்க ஊழியர்களுக்கு கூடுதலான வருடாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அரசாங்க ஊழியர்களின் வருகை, செயல்திறன்களை அடிப்படையாக கொண்டு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இந்த நடைமுறையின் கீழ் அரசாங்கத்துறை சார்ந்த அனைத்து நிறுவன ஊழியர்களும் நன்மை அடைவார்கள் என அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில், அரசாங்க ஊழியர்களுக்காக வருடாந்த கொடுப்பனவு வழங்குவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டாலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனினும் இம்முறை உரிய வகையில் அந்த கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நிதி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும்! றிஷாட்

wpengine

மொட்டு கட்சியினை பலப்படுத்த றிஷாட்டையும் குடும்பத்தையும் பயன்படுத்துகின்றார்கள்.

wpengine

யாழ் மின்சாரம் தாக்கி தந்தையும், மகனும் உயிரிழப்பு

wpengine