பிரதான செய்திகள்

அரச ஊழியர்களின் கடன்களை அறவிடுமாறு அரசு கோரிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட நிலைமையை கருத்திற் கொண்டு அரச ஊழியர்களிடம் கடன் தவணைகள் மற்றும் கடன் வட்டியை அறவிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.


எனினும் இந்த மாதம் முதல் மாத சம்பளத்தில் மீண்டும் அறவிடப்படும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். அதற்கான சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட நிலைமையை கருத்திற் கொண்டு அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு கடன் மற்றும் தவணைகளுக்காக அவர்களின் சம்பளத்தில் அறவிட வேண்டிய பணத்தை அறவிடாமல் இருப்பதற்கு அமைச்சு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது.


அத்துடன் கொரோனா வைரஸ் காரணமாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ள சுற்றரிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘செல்பி’ முலம் ஊயிரை இழந்த ஓட்டமாவடி என்.எம்.ரியாஸ்

wpengine

வடக்கிற்கான வரவு செலவுத்திட்டமே இது, இதட்கு எதிர்க்கட்சியில் சந்தோஷப்படும் ஒரேயொரு நபர் நானே !

Maash

மஹிந்த அரசின் பங்காளிகளாக வருமாறு முஸ்லிம்களுக்ககு அழைப்பு

wpengine