பிரதான செய்திகள்

அரசாங்கம் ஒன்றும் நிறைவேற்றாமையினால் மக்கள் தற்போது வெறுப்படைந்துள்ளார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உரிய நேரத்தில் தனியாக போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய ஒன்றும் நிறைவேற்றப்படவில்லை என்ற அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் உரிய முறையில் ஒன்றும் நிறைவேற்றாமையினால் மக்கள் தற்போது வெறுப்படைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பாரிய பின்னடைவை கண்டுள்ள சுதந்திர கட்சியை வலுப்படுத்தினால் மீள எழுவது கடினமான விடயம் அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

wpengine

ராஜபக்சர்களை தொடர்ந்து பாதுகாப்பதற்காக மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார்-ரணில்

wpengine

அமைச்சர் சம்பிக்கவின் தொலைபேசிகளை விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் உத்தரவு

wpengine